'வற்'னால் ரூ. 100 பில்லியன் வருமானம்...
எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் பெறுமதி சேர் (வற்) வரி அதிகரிப்பு காரணமாக, அரசாங்கத்துக்கு 100 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, அரச நிதிக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே.செனவிரத்ன, தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.