அனலின் அறிக்கை- அரங்கேறும் நாடகமோ?

அனலின் அறிக்கை- அரங்கேறும் நாடகமோ?

நிந்தவூரில் உள்ள அநியாயமான ......



அனல் மின்நிலையம் 2013ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தாலும், 2007 இல் இருந்தே அடித்தளம் இட்டிருக்கின்றது. 
6 ஆண்டுகள் அனல் மக்களை / சூழலை நிர்மூலமாக்க - உருப்பெற எடுத்துக்கொண்ட காலங்களில் ...

1. அனலுக்கு அனுமதி ஓடி ஆடி எடுக்கப்பட்டிருப்பது தெளிவு.அனுமதி எடுத்துக்கொண்ட வழிகளை தேடினால் ஊரில் இருக்கின்ற *பிரதேசே அபிவிருத்திக்குழு முதல் சுற்றாடல் அதிகார சபை வரை பதில் கூற வேண்டும்.குறிப்பாக அன்றிருந்த ஊரின் நிர்வாக கட்டமைப்பில் பிரதி சுகாதார அமைச்சருக்கு மிகப்பெரிய பங்குண்டு . அமைச்சரும் பதில் கூறவேண்டும் இன்றேல் அனலை இழுத்து மூட வைக்கவேண்டும். Faizal CassimMohamed Thambi, Hasen Aliமுடியவில்லை, அனல் உறவும் அனலால் வெந்த பணமும் வேண்டுமென்றால் மக்களை மறக்கட்டும், ஊருக்கும் துரோகம் செய்யட்டும்.இல்லை மக்கள் வேண்டும் என்றால் அனலுக்கு எதிராக செயலில் காட்டட்டும்.அவதானியுங்கள்! ஊர் மக்களே !2.அனல் பிரதி அமைச்சரின்அறிக்கையுடன் மட்டும் முடிவுறும் காரியமில்லை.'அந்தா வருது இன்னா வருது' எனக்கூறி அலைக்கடிக்கும் அற்ப சிந்தனையும் வேண்டாம்.தணலில் (கருமை நிற சாம்பல்) வெந்து கொண்டிருந்த மக்கள் -கண்ணீர் இன்றி ஒரு மாதமாக உறங்குவதும் இறைவனின் நாட்டம்.அனல் மின்நிலையத்தில் திருத்த வேலைப்பாடுகள் செய்கின்றனர்.ஆனாலும் அனலுக்கு ஓய்வை கொடுக்கக்க கூடாது என்பதிலும் கரிசனையாக இருக்கிறார் - உரிமையாளர்.ஊர்மக்களை பற்றி சிந்தித்ததாக இன்னும் தெரியவில்லை.இன்று திருத்தி: நாளை 'பழைய குருடி கதவை திறடி' என்ற சீலம் ஆக்குவதும் நியாயமில்லை.பிரதேச செயலகமே !அறிக்கையில் ஏன் இன்னும் தாமதம்?அமைச்சர் நியாயமாக நடக்கின்றார் என்றால்?என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மக்களுக்கு கூறுங்கள்.ஏன் அறிக்கையினை,அனலை நிறுத்தி திருத்தல் (ஜில் மால் வேலைகள் ) முடிவுற்றதும்,ஆள் அனுப்பி அறிக்கை தயாரித்து அனைவரின் வாய்க்குள் அல்வா போடுவதத்திற்கா வேண்டியா தாமதம்?படைத்தவனை மறக்க வேண்டாம்,சூழ்சசிக்காரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன்.ஊரின் துருவங்கள் என்று தங்களை தாங்களே இனம் காட்டிக்கொள்ளும் -ஏளன பேச்சு, எதிர் பேச்சு தர வேண்டுமானால் எடுப்புடைய சொற்கள்.இருளில் மறைந்த கரும்பூனைபோல் 'ஊரில் உள்ள பினாமிகளின் சதிவலைகளில் சிக்கிய அரசியல் வாதிகளின் அற்ப சிந்தனைகள்தான் ஊரின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை. !அமைச்சரே - மக்களே - அவதானிகளே ...!அனல் இல்லை #அவள் !!சிந்தித்து பயன்பெறுவோம்!

Popular posts from this blog

இலங்கை உட்பட 4 நாடுகளில் வேற்று கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு

எட்டு லட்சம் ரூபா பணத்துடன் சாரதி தலைமறைவு! பொலிஸார் வலைவீச்சு

கொங்கிறீட் தூணின் ஒரு பகுதி உடைந்து தலையில் விழுந்ததில் பொலிஸ் அதிகாரி படுகாயம்!