Posts

Showing posts from November, 2016

கிழக்கில் பெருமளவில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்!

Image
திருகோணமலை கடற்கரையில் பெருமளவு மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. பூச்சக்கன்னி எனப்படும் பெருமதியான இனத்தைச் சேர்ந்த மீன்களே இவ்வாறு கரையொதுங்கியுள்ளன. சுமார் 20 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான மீன்கள் இதுவரை இறந்த நிலையில் கரையோதுங்கியுள்ளதாக இப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான காரணத்தை கடற் தொழில் திணைக்கள அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் நேற்று முன்தினமும் 10 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் கரைவலை மூலம் பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் வரித் திருத்தம் அமுல்!

Image
இன்று முதல் திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆகியன நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த 26 ம் திகதி பாராளுமன்றத்தில் குறித்த வரித் திருத்தம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய இன்று முதல் பெறுமதி சேர் வரி நூற்றுக்கு 11 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கவுள்ளது.

டாப்சிக்கு ஆசை வந்து விட்டதாம்!

Image
தமிழில் ‘ஆடுகளம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் டாப்சி. வந்தான் வென்றான், ஆரம்பம், வைராஜா வை போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். தற்போது சிம்புவுடன் ‘கான்’ படத்தில் நடித்து வருகிறார். இரண்டு இந்திப் படங்களும் அவர் கைவசம் வைத்துள்ளார்.  டாப்சி பேட்மிண்டன் வீரரை காதலிப்பதாக கிசுகிசுக்களும் பரவி வருகின்றன இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என்றும் இணைய தளங்களில் செய்திகள் பரவி உள்ளன. டாப்சி டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பைக் ஓட்டும் ஆசையை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-   ‘‘பைக், ஆண்கள் மட்டுமே ஓட்டக்கூடியது அல்ல. பெண்களுக்கும் பைக் ஓட்டும் திறமை இருக்கிறது. ஆண்களைப் போல் பெண்களும் திறமையாக பைக் ஓட்டுவார்கள். எனக்கு பைக் ஓட்ட ஆர்வம் இருக்கிறது. சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் பைக் ஓட்ட தயாராக இருக்கிறேன். என் பெற்றோர்கள் அதற்கு அனுமதிக்க வேண்டும். அவர்கள் சம்மதம் கிடைத்தால், தாராளமாக பைக் ஓட்டுவேன்.’’

சிகரட் மீது வெறுப்பு ஏற்படுவதற்காகவே வரி அதிகரிப்பு!

Image
புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டை தடுப்பதில் இலங்கை பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மது, புகையில் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருள் பயன்பாடுகளில் இருந்து விடுபட்ட வாழ்கை ஒன்றை அனைத்து இலங்கையர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி, மஹவலி ரிஷ் ஹோட்டலில் இடம்பெற்ற மது, புகையில் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். சிகரட் பெட்டிகளின் 80 வீதமாமான பகுதிகளில் படங்கள் மூலமான எச்சரிக்கையை வௌியிடுவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்க முடிந்ததற்கு பாராட்டுக்களை தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் சிகரட்டுக்கள் மீதான வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும், அது சிகரட் பயன்பாடு மீது வெறுப்பு ஏற்படுவதற்கான நடவடிக்கை என்றும் ஜனாதிபதி கூறினார். 21 ம் நூற்றாண்டில் போதை ஒழிப்பு மற்றும் கொள்கை இலக்குகளை நோக்காகக் கொண்டு நடைபெறுக...